Melbourne Tamils final salute to Tamil Peace Negotiator S P Tamil Selvan - Photos
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் உட்பட அவரோடு விரச்சாவைத்தழுவிய மாவீரர்களுக்கு அவுஸ்திரேலிய மெல்பேர்னில் வணக்கநிகழ்வு
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 மாவீரர்களுக்கும் மற்றும் அனுராதபுரத்தில் வீரச் சாவைத்தழுவிய 21 மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துமுகமாகவும் அத்துடன் ஸ்ரீலங்கா அரசினால் அம் மாவீரர்களின் வித்துடல்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் கேவலப்படுத்திய செயலை கண்டிக்கும் முகமாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெல்பேர்ண் ஸ்கோர்ஸ்பீ சென். ஜூட் ஆலய மண்டபத்தில் வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது.
வுpக்டோரிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றிணைந்து நடத்திய இந்த வீரவணக்க நிகழ்வில் வயது வேறுபாடின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து தமது கண்ணீர் அஞ்சலினையும், மலர் வணக்கத்தினையும் செலுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள், மதகுருமார், பல்கலைக்கழக பேராசிரியர், தமிழ்இளையோர் மற்றும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் வீரவணக்க உரைகளும், ஆர்வலர்களின் கவிதாஞ்சலிகளும் இடம்பெற்றிருந்தன. மண்டபம் நிறைந்தளவில் இருக்கைகளையும் சுற்றி மக்கள் நின்றதால், மண்டபத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், மண்டபத்தின் வெளியே நின்றும் மக்கள் தமது வீரவணக்கத்தினை செலுத்தியிருந்தனர்.